Friday, June 13, 2008

பிரிவை உணர்கிறேன்..!! Missing you..!!

ஆம்....!!

நான் விரும்பும் படம் வெளியிட்டு
பார்க்க முடியாத போதும்...!!

அனுப்பிய மின்னஞ்சலுக்கு
பதில் எதிர்பார்க்கும் போதும்...!!

அனுப்பிய மின்னஞ்சலையே
மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!

விடியலில் தலையணை
ஈரவளையம் பார்க்கும் போதும்...!!

தொலைபேசியில் பேசுகையில்
நாதழுக்கும் போதும்...!!

பிஞ்சு மழலையின் ஒலியை
கைபேசியில் கேட்கும் போதும்...!!

ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!

பிரிவும் ஓரு சுகம்தான்
சந்திக்கும் வரையில்

அந்த சந்திப்பை நோக்கியே
இந்த பிரிவின் பயணம்....!!!

4 comments:

  1. பிரிவதற்கு என்றே சில உறவுகள்...!!!
    பிரிவு உணர்த்திச்செல்லும் சில உண்மைகள்...
    சில பிரிவுகள் வலி... சில பிரிவுகள் வழி :-)
    பிரிவுகள் பொதுவானது...
    தந்த வலியும் பாடங்களும்!!!!

    ReplyDelete
  2. "Pirivukalil kodumayanathu...
    Uravukalai Uiraga izhappathuve..."

    Sorry..I couldn't make it in tamil font

    ReplyDelete