Friday, September 5, 2014

ஆசிரியர் தினம்..!! - என் தமிழாசிரியர் பூவராகவன்..!!!

அறிவியல், புவியியல் கற்குமுன்
”அகரம்” கற்றுகொடுத்தவன்,

தாய் கற்றுதரும் முதல் மொழிக்கும் பிறகு
தாமாய் நாம் கற்கும் பழ மொழிகளுக்கும் ஊற்றானவன்.


மணனம் செய்ய தேவையில்லை
மதிப்பீடுகள் பற்றி பயமும் இல்லை,

அவரவர் வாழ்க்கைக்காக பாடம் பலர் எடுக்க,
வாழ்க்கை கல்வி, சமூகநெறி பற்றி பேச இவர் மட்டுமே...!!!

வரலாற்று ஆசிரியர் பிறநாடு பற்றி பேச
வள்வில் ஓரி வரலாற்றை நமக்குரைத்தவர்...

சுருக்கமாக நான்,என் என்ற தன்னிலை மறந்து
நாம் என்று பொதுநலமாக வாழகற்று கொடுத்தவர்

பெண்கள் மீதான மதிப்பை மதிப்பெண் காட்டிலும்
மதிக்க கற்றுகொடுத்தவர்.....!!!

வாழ்க அவர் பணி... சிறக்க அவர் தொண்டு..!!