Thursday, April 8, 2010

தேடுகிறேன்........!!!

தேடுகிறேன் முதல் முறையாய்.......

கம்பனும் காளிதாசனும் பெண்களுக்காக
மை பிடிக்க.... 

முதன் முதலாய் தேடுகிறேன்.....
வார்த்தைகளை என்னவளுக்காய்....

கிறுக்கள்களில் பிறந்து
கவிதை...
புழம்பலில்  பிறந்து
முடிவு....

உனை பற்றி என் தேடலும் அப்பிடிதான்
போலும்.....

என் வீட்டு செல்லக் குட்டி எழுதி பழகிய
மெல்லினதில்-இடையினத்தில் உன் பெயர்
தேடி பார்கிறேன்..............

வானம் வரைந்துவிட்ட கோலங்களில்
உன் முகம் தேடுகிறேன்.....

நேற்று கேட்ட குயிலின் ஒசையிலும்
உன் குரல் இல்லை....
என்ன கண்களால் கவி பேசுபவளோ நீ..?

அம்மா போட்ட காபியின் கை மணத்தில்
உன் ஸ்பரிசம் இல்லை....

மாலை மயங்கும் அந்திநேர கதிரவன்
நிறத்தவளா நீ??? தேடுகிறேன்....

காட்டிவிட்டுப்போ உன் திருமுகத்தை...
ஒருமுறையேனும் என் வீட்டு பூக்களும்
வெட்கப்படட்டும்...

எப்போது களவாட போகிறாய் என்
காத்திருக்கும் கைதியாய் நான்..!!!

Sunday, March 21, 2010

கிட்டுமோ..!!!

அரை காணி நிலம்
அதில் ஒரு குடிசை......

மின்விளக்கு வேண்டாம்
மண்விளக்கு போதும்.....

உலகம் அறிய சில புத்தகம்...
உடற்பயிற்சிக்கு உழவு.....

இனிய காதல் - அதற்கு அத்தாட்சி ஒரு
இல்லத்து அரசி...!!!

ஆனால் இவைதானா இந்த உலகம் நமக்கு சொல்லி கொடுத்தது????????

உழவை கண்ணால் மட்டும் நாம் பார்க்க...
உளறலிலும் ஆங்கிலத்தை வரவழைத்தது..

முற்பகல் கீதம் கேட்ட குயில்கள் போய்
முன்பதிவு செய்த இசைகள் மட்டுமே......

மென்பொருள் வேலையே புருச லட்சணமாக்கி
மெயில் சேவையில் உறவை பறிமாற்றியது

ஐயம் போக்க வந்த கூகில் - அறிவுவளர்க்க எனமாறி
ஐ-போனை ஆறாம் விரல் ஆக்கியது

விவசாயமும் விதை-நெல்லும் இல்லாவிடிலும்...
வேளச்சேரியிலும் வடவெள்ளியிலும் இருக்கிறது - பல காணி நிலம்

உலகம் சுற்றும் வாலிபனையே - வாழ்க்கையில்
உருப்பட தெரிந்தவனாக்கியது

"திரைகடல் ஓடியும் திரவியம் சேர்"
இதில் மட்டும் ஆதிதமிழனுடன் இணைகிறோம் -

எவை நமக்கு வேண்டும் என- தெரியும் முன்
வேண்டா பலவற்றை சுமக்கிறோம் நாம்...........
எதைவிடுவது இப்போது......???

முடிந்த நம் பால்யத்தில் - மூதாதையர் சேர்த்து வைத்த
பாரம்பரியத்தை தேடுகிறோம்......!!!! - கிட்டுமோ