Friday, July 31, 2009

நானே எனக்கு கடவுள்..!!!

உனது தவறை நீ உணர்ந்தால்....!!!
அதையே நீ களைந்தால்.....!!!!
நீயே உனக்கு கடவுள்...!!!
.........................இதேப்பிடி இருக்கு...?

Tuesday, July 21, 2009

கிரகணம்..!!

1....... இது பிடிக்காதவனை திட்டும் வசவுசொல்!!!!
2......தலைவனை அழிக்கும் சக்திபடைத்ததாம் இது, இன்னும்...
பல தலைவன்/தலைவிகள் உயிருடனே..!!
3......இந்நேரம் உண்ணுதல் தவறு.....!!!
4......நிலத்தை அதிர்விக்கும் ஆற்றல் படைத்தது..!!
5......ஆற்பரிக்கும் கடலை ஆட்டுவிக்கும் சக்தி இதற்கு உண்டு.!!
இதையெல்லாம் கூறுவது தத்துவமும் விஞ்ஞானமும்.!!

இவை அனைத்தும் தாண்டியது இனிமையான
அந்த இயற்கையின் அற்புத நிகழ்வு..!!

கவிஞனின் கண்ணில்.....
இயற்கை என்னும் காதலன் நாணும் காதலியின் கரம்பிடித்து
அணிவிக்கும் வைர மோதிரம்..!!!

Wednesday, June 10, 2009

தனிமை..!!!

தனித்திருப்பது மட்டும் தனிமை என்றால்
இது தனிமை இல்லை..!!!

எப்போதும் கண்முன் கணினி...!!
எண்ணும் போது அரட்டை அடிக்க என்அறை நண்பர்கள்..!!

நினைத்ததும் கேட்க ராஜாவின் இசை..!!
நினைத்த நிமிடத்தில் வெளிநாட்டு தொலைபேசி வசதி..!!

விட்டுவைக்க நேரம் இன்றி வேலை..!!
வேலை செய்யவும் மனம் இல்லை..!!

வாரம் இரண்டு விடுமுறை..!!!
இருந்தும் ஊர் சுற்ற மனம் இல்லை..!!

வென்றுவிடதான் நினைக்கிறேன்..!!
இருந்தாலும் தினமும் என்னை ஜெய்கிறது இந்த தனிமை..!!

Friday, July 11, 2008

இயற்கையாம் இயற்கை..!!!

இயற்கையை திட்டுகிறேன்... !!!
இயற்கை கடவுளேன்றால் கடவுளையும் திட்டுகிறேன்...!!!

ஏன் இத்தனை மாறுபட்ட சீதோசன நிலை நம் நாட்டில்...?

பருவம் தப்பாமல் மழை பெய்யும் நாடுகள் பல இருக்க....
சேரன் சோழன் பாண்டியன் ஆண்ட நம் நாட்டில் தண்ணீர் பஞ்சம்..!!!

சோழநாடு சோறுடைத்து..!! ஹம்..!!
உணவு பஞ்சமென்பது என்னவென்று தெரியாத என் நாட்டு கவிஞன்
இப்பொது எழுதும் காவியங்கள் கள்ளிகாட்டு இதிகாசம்... கருவாச்சி காவியம்..


இயற்கையாம் இயற்கை..... இதெல்லாம் கடவுளின் செயற்கை..!!

Friday, June 13, 2008

பிரிவை உணர்கிறேன்..!! Missing you..!!

ஆம்....!!

நான் விரும்பும் படம் வெளியிட்டு
பார்க்க முடியாத போதும்...!!

அனுப்பிய மின்னஞ்சலுக்கு
பதில் எதிர்பார்க்கும் போதும்...!!

அனுப்பிய மின்னஞ்சலையே
மீண்டும் படித்துபார்க்கும் போதும்...!!

விடியலில் தலையணை
ஈரவளையம் பார்க்கும் போதும்...!!

தொலைபேசியில் பேசுகையில்
நாதழுக்கும் போதும்...!!

பிஞ்சு மழலையின் ஒலியை
கைபேசியில் கேட்கும் போதும்...!!

ஆம் ,, பிரிவை உணர்கிறேன் நான்,,!!!!

பிரிவும் ஓரு சுகம்தான்
சந்திக்கும் வரையில்

அந்த சந்திப்பை நோக்கியே
இந்த பிரிவின் பயணம்....!!!

தமிழனும் ஜப்பானியனும்...!!

தமிழன் எதையெல்லாம் எளியது என கூறுகிறானோ...
அந்த கடின காரியத்தை..
ஜப்பானியன் மிக எளிதாக முடித்துகாட்டுகிறான்..!!
.
.
.
மிக சிறிதே முரண்பாடு,,????
.
.
.
நானும் தமிழன் தானே..!!!

Wednesday, January 9, 2008

உரிமையும் உறவும்..!!!

உரிமை இல்லாத இடத்தில் உறவுகள் வளருவதில்லை..!!!