Thursday, April 8, 2010

தேடுகிறேன்........!!!

தேடுகிறேன் முதல் முறையாய்.......

கம்பனும் காளிதாசனும் பெண்களுக்காக
மை பிடிக்க.... 

முதன் முதலாய் தேடுகிறேன்.....
வார்த்தைகளை என்னவளுக்காய்....

கிறுக்கள்களில் பிறந்து
கவிதை...
புழம்பலில்  பிறந்து
முடிவு....

உனை பற்றி என் தேடலும் அப்பிடிதான்
போலும்.....

என் வீட்டு செல்லக் குட்டி எழுதி பழகிய
மெல்லினதில்-இடையினத்தில் உன் பெயர்
தேடி பார்கிறேன்..............

வானம் வரைந்துவிட்ட கோலங்களில்
உன் முகம் தேடுகிறேன்.....

நேற்று கேட்ட குயிலின் ஒசையிலும்
உன் குரல் இல்லை....
என்ன கண்களால் கவி பேசுபவளோ நீ..?

அம்மா போட்ட காபியின் கை மணத்தில்
உன் ஸ்பரிசம் இல்லை....

மாலை மயங்கும் அந்திநேர கதிரவன்
நிறத்தவளா நீ??? தேடுகிறேன்....

காட்டிவிட்டுப்போ உன் திருமுகத்தை...
ஒருமுறையேனும் என் வீட்டு பூக்களும்
வெட்கப்படட்டும்...

எப்போது களவாட போகிறாய் என்
காத்திருக்கும் கைதியாய் நான்..!!!

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. what is the meaning of following lines???

    கிறுக்கள்களில் பிறந்து
    கவிதை...
    புழம்பலில் பிறந்து
    முடிவு....

    ReplyDelete
  3. Nothing has clear start.... things start opaque. And get clarified as time pass-by

    ReplyDelete