Thursday, December 3, 2015

§§§§§§§........வேண்டும் மழை.........§§§§§§

உதவாக்கரை அரசியல்வாதிகளின் தோளுரிக்க....!!!
உதவும் கரம் ஊர் முழுக்க உள என்றரிய..!!!
நாம் மழைக்கு செய்த பிழை அரிய....!!!
செய்த பிழையை எப்பிடி திருத்த என்றரிய...!!!
சாதி, மதத்தை விட சுற்றமும் நட்பும் உயர்ந்ததென்றரிய...!!!
இயற்கையின் முன் நாம் ஒன்றென்றரிய....!!!
சொல்லும் நேரம், காலம் தவராமல் கூட்டிசெல்லும் மகிழ்வுந்தை விட...
ஐந்தடி நீரிலும் சுகம், சுமை பாராமல் கரை சேர்க்கும் அரசு பேருந்தே சிறந்தது என்றரிய..!!!
"தனி ஒருத்தி" அரசு இயந்திரத்தை முடக்குதலும்..
"நமக்கு நாமே" என்ற நாமம் நீரில் கரைதலும்...
இனி நமக்கு உதவாது என்றரிய...!!!
மானிடா........மழை வேண்டாம் என்றென்னாமல்,
குடுத்த கொடையை சேமிக்க கற்றுகொள்...!!!
வேண்டும் மழை வேண்டும்..!!!
- பிழை

No comments:

Post a Comment